என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே ஆடுகளை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 48). இவர் தனது 2 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு பின்புறத்தில் கட்டியிருந்தார். நேற்று காலை எழுந்து சென்று பார்த்த போது 2 ஆடுகளையும் காணவில்லை.
இதையடுத்து ஆடுகளை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஜெ.குறுக்கு ரோடு வாரச்சந்தையில் 2 பேர் தனது ஆடுகளை இருசக்கர வாகனத்தில் கட்டி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் கலியபெருமாளை கண்டதும் ஆடுகளை திருடிய நபர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் கலியபெருமாள் மடக்கி பிடித்தார்.
பின்னர் உடையார்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். கலியபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.
விசாரணையில் ஆடுகளை திருடியவர்கள் உடையார்பாளையம் சேர்ந்த பழனிவேல் மகன் வினோத் (20), வடிவேல் மகன் சின்னராஜா என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.






