என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
    X

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் அறந்தாங்கி அன்னை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    அறந்தாங்கி:

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் படித்து தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.

    தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் பூர்ணசங்கரி என்ற மாணவி 500க்கு 489 மதிபெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். அவர் பாடவாரியாக பெற்ற மதிபெண்கள் விபரம்: –

    தமிழ்–96, ஆங்கிலம்–95, கணக்கு–100, அறிவியல்–98, சமூகஅறிவியல்–100. மாணவி பிரியதர்ஷினி 500க்கு 485 மதிபெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். அவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் விபரம்:–

    தமிழ்–96, ஆங்கிலம்–95, கணக்கு–95, அறிவியல்–99, சமூக அறிவியல்–100

    மாணவிகள் சினேகா, வினோதினி, அபிராமி ஆகியோர் 500க்கு 483 மதிபெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றனர். மாணவ, மாணவிகளின் தேர்ச்சிக்காக உழைத்த ஆசிரியர்களையும், பள்ளியின் தாளாளர் நாகராஜன், முதல்வர்கள் யோகாராஜா, அனுசுயா உள்ளிட்டோர் பாராட்டினர்.

    Next Story
    ×