என் மலர்
செய்திகள்

மானாமதுரை பகுதியில் கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
மானாமதுரை பகுதியில் கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. 2 நாட்களாக பலத்த காற்றும் வீசியது. திடீர் என்று மழை பெய்தது. மழை பெய்ய தொடங்கியபோது சுமார் 5 நிமிடம் ஆலங்கட்டி மழையாக பெய்தது.
ரோடுகளில் பணி துளி தெறித்து ஒடியது. பின் தொடர் மழையால் மானாமதுரை, சிவகங்கை சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்பட்டது. சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவு ஓடியது.
மழைநீர் செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கு எடுத்து ஓடியது. கன மழையால் மானாமதுரை பகுதி குளிர்ச்சி அடைந்து காணப்பட்டது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story






