என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது
    X

    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மாகரல் பாலாற்றுப் படுகையில் திருட்டுத்தனமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது காலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, மகேந்திரன், முருகேசன் ஆகிய 3 பேர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய போது பிடிப்பட்டனர். அவர்களைக் கைது செய்த போலீசார் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×