என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை ஊசி வாலிபர் மரணம்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை ஊசி வாலிபர் மரணம்

    படப்பை விஷ்ணு நகரில் போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் மரணமடைந்தார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருச்சி காந்திநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 19). இவர் சென்னை அருகே உள்ள படப்பை விஷ்ணு நகரில் தங்கி இருந்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த அறையில் 30 பேர் தங்கி இருந்தனர்.

    போதை ஊசி பழக்கத்துக்கு வாலிபர் கோவிந்தராஜ் அடிமையானார் என்று கூறப்படுகிறது. அவர் வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகி இருந்தார். நேற்றும் அவர் வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் படுத்து தூங்கினார்.

    அறையில் தங்கியிருந்த நண்பர்கள் அவரை தட்டி எழுப்பினர். அவர் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கோவிந்தராஜ் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மணிமங்கலம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×