என் மலர்
செய்திகள்

அலங்காநல்லூரில் பெண் ஜவுளி வியாபாரி கத்தியால் குத்திக்கொலை: மகன் வெறிச்செயல்
அலங்காநல்லூர், மே 22–
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் 1–வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது45). இவர் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு கெங்கேஸ்வரன் (25) என்ற மகன் லாரி டிரைவாக உள்ளார்.
தனது தாயின் நடத்தையில் கெங்கேஸ்வரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு 10 மணி அளவில் பாண்டியம்மாள் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கெங்கேஸ்வரன், தூங்கி கொண்டிருந்த பாண்டியம்மாளை சரமாரியாக குத்தி விட்டு ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பாண்டியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
தனது தாய் இறந்த தகவல் அறிந்ததும் கெங்கேஸ்வரன், கிராம நிர்வாக அதிகாரி சிவபிரகாசிடம் சென்று தனது தாயை குத்தி கொன்று விட்டேன் என்று கூறினார். அவர் இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கெங்கேஸ்வரனை கைது செய்தனர்.
தாயை மகனே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.