என் மலர்
செய்திகள்

சிதம்பரத்தில் நள்ளிரவில் ஊருக்குள் நுழையும் முதலைகள்: கிராம மக்கள் பீதி
ஊருக்குள் படையெடுக்கும் முதலைகளால் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் பகுதியில் உள்ள கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அமைதியான ஆன்மீக பூமி. எப்போதும் வேதமந்திரங்களின் முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எப்போதும் சிதம்பரம் பகுதி பரபரப்பாக காணப்படும்.
சிதம்பரத்தைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு மழை காலம் என்றால் பயம். அது ஏன் என்று கேட்கிறீர்களா? மழை காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து கீழணைக்கு தண்ணீர் வரும். அப்போது தண்ணீரோடு சேர்ந்து அங்கிருந்து முதலைகளும் வந்துவிடுகின்றன.
அந்த முதலைகள் பின்னர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு வந்து விடுகின்றன.
முதலைகள் அந்த ஏரியிருந்து ஊர் சுற்றிப் பார்க்க புறப்பட்டு விடுகின்றன. வீராணம் ஏரியிலிருந்து பழைய கொள்ளிடத்திற்கு வருகின்றன. அங்கிருந்து கான்சாகிப் வாய்காலுக்கு வருகின்றன.
பழைய கொள்ளிடம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து சிதம்பரம் நகர எல்லை வரை வருகிறது. சிதம்பரம் எல்லையிலிருந்து சிதம்பரம் நகரம் வரை கான்சாகிப் வாய்க்கால் செல்கிறது. கொள்ளிடம் கரையோரம் வல்லம் படுகை, திட்டுக்காட்டூர், நந்தி மங்கலம் உள்பட 15–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
பழைய கொள்ளிடம் ஆற்றில் காலை நேரத்தில் முதலைகள் ஆற்றின் கீழ் பகுதியில் சென்று பதுங்கிக் கொள்ளும். இரவு நேரத்தில் ஆற்றின் நீர் மட்டத்திற்கு மேலே எட்டிப்பார்க்கும். சிறிது நேரம் ஆற்றில் அங்கும் இங்கும் நீந்தி விளையாடும். களைப்பு ஏற்பட்டவுடன் ஆற்றை விட்டு வெளியே வரும்.
புல் தரையில் தவழ்ந்து நிலா வெளிச்சத்தில் இளைப்பாறும். பின்னர் இரை தேடி அங்கும்–இங்கும் நோட்டமிடும். ஆடு, கோழி ஆகியவை அதற்கு விருப்பமான அசைவ அயிட்டம். அவை எங்கே இருக்கிறது என்று தேடி அலையும்.
ஆற்றின் கரையோரம் படுத்து கிடக்கும் ஆட்டுக் குட்டியை தன்கோரப் பற்களால் கடித்து இழுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிடும்.
அங்கு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி ஏப்பம் விட்டு விடும். அது ஜீரணமாக 2 நாட்கள் ஆகும். அதன்பிறகு மெல்ல மீண்டும் வெளியே வரும். அப்போது ஆட்டு குட்டி கிடைக்காவிட்டால் வருத்தப்படாது.
கோழிக்குஞ்சுகள் சிக்கினால் அதையும் விழுங்கிவிடும். இரவில் அட்டகாசம் செய்யும் முதலைகள் காலை நேரத்தில் செய்யும் அட்டகாசம் அதைவிட அதிகம். என்ன என்கிறீர்களா?
காலையில் காலைக் கடன் முடித்து விட்டு யாராவது ஆற்றில் இறங்கினால் அவர்களது காலை கடித்து குதறி விடும். ஆற்றில் தண்ணீர் அதிகம் வருகிறதே குளிக்கலாம் என்று நினைத்து இறங்கினால் காலை துண்டாக்கிவிடும். சிதம்பரம் பகுதியில் முதலையால் கால் இழந்தவர்கள் பலர் உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழை வெள்ளம் வந்தபோது வீராணம் ஆற்றிலிருந்து ஏராளமான முதலைகள் சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களை அச்சுறுத்தி வந்தன.
மழை காலம் முடிந்த பிறகு முதலையின் அட்டகாசம் குறைந்து விட்டது என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். தற்போது கோடைகாலம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. மேலும் முதலைகள் அட்டகாசம் செய்ய தொடங்கி உள்ளன.
இந்த நேரத்தில் முதலை எப்படி வருகிறது? மழை காலம் முடிந்த பிறகு கொள்ளிடம் ஆறு மற்றும் கான்சாகிப் வாய்க்காலில் முதலைகள் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
அந்த பகுதியில் ஆற்றின் கரையோரம் துளை போட்டு பதுங்கி விடுகின்றன. கோடைகாலம் தொடங்கியதும் ஆற்றில் தண்ணீர் வற்றிய பிறகு இரை தேடி வெளியே வருகின்றன.
அப்போது சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் கிராம மக்கள் தூக்கமில்லாமல் தவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சிதம்பரம் அருகே உள்ள பிள்ளை முத்தாபிள்ளை சாவடி கிராமத்தில் ஒரு முதலை ஊருக்குள் புகுந்தது.
வனத்துறையினர் அதை மடக்கிப் பிடித்து சிதம்பரத்தில் உள்ள வக்கார மாரி குளத்தில் கொண்டுவிட்டனர். தற்போது மீண்டும் அதே பகுதியில் மீண்டும் மற்றொரு முதலை கிராமத்துக்குள் நுழைந்தது. வனத்துறையினர் அதை பிடித்து வக்காரமாரி குளத்தில் கொண்டு போய் விட்டனர். இந்த குளத்தில் 100–க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.
அந்த குளத்தில் மீன்களை அவை சாப்பிட்டு வருகின்றன. இந்த குளத்தில் இருந்து கான்சாகிப் வாய்க்காலுக்கு முதலைகள் தப்பி வந்து விடுகின்றன என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
ஊருக்குள் படையெடுக்கும் முதலைகளால் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் பகுதியில் உள்ள கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை தடுக்க என்ன செய்யலாம்? சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணைகள் அரசு அமைக்க வேண்டும். அங்கிருந்து அவை தப்பிச் செல்லா வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? அவர்களின் அச்சம் தீருமா?
சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அமைதியான ஆன்மீக பூமி. எப்போதும் வேதமந்திரங்களின் முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எப்போதும் சிதம்பரம் பகுதி பரபரப்பாக காணப்படும்.
சிதம்பரத்தைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு மழை காலம் என்றால் பயம். அது ஏன் என்று கேட்கிறீர்களா? மழை காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து கீழணைக்கு தண்ணீர் வரும். அப்போது தண்ணீரோடு சேர்ந்து அங்கிருந்து முதலைகளும் வந்துவிடுகின்றன.
அந்த முதலைகள் பின்னர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு வந்து விடுகின்றன.
முதலைகள் அந்த ஏரியிருந்து ஊர் சுற்றிப் பார்க்க புறப்பட்டு விடுகின்றன. வீராணம் ஏரியிலிருந்து பழைய கொள்ளிடத்திற்கு வருகின்றன. அங்கிருந்து கான்சாகிப் வாய்காலுக்கு வருகின்றன.
பழைய கொள்ளிடம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து சிதம்பரம் நகர எல்லை வரை வருகிறது. சிதம்பரம் எல்லையிலிருந்து சிதம்பரம் நகரம் வரை கான்சாகிப் வாய்க்கால் செல்கிறது. கொள்ளிடம் கரையோரம் வல்லம் படுகை, திட்டுக்காட்டூர், நந்தி மங்கலம் உள்பட 15–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
பழைய கொள்ளிடம் ஆற்றில் காலை நேரத்தில் முதலைகள் ஆற்றின் கீழ் பகுதியில் சென்று பதுங்கிக் கொள்ளும். இரவு நேரத்தில் ஆற்றின் நீர் மட்டத்திற்கு மேலே எட்டிப்பார்க்கும். சிறிது நேரம் ஆற்றில் அங்கும் இங்கும் நீந்தி விளையாடும். களைப்பு ஏற்பட்டவுடன் ஆற்றை விட்டு வெளியே வரும்.
புல் தரையில் தவழ்ந்து நிலா வெளிச்சத்தில் இளைப்பாறும். பின்னர் இரை தேடி அங்கும்–இங்கும் நோட்டமிடும். ஆடு, கோழி ஆகியவை அதற்கு விருப்பமான அசைவ அயிட்டம். அவை எங்கே இருக்கிறது என்று தேடி அலையும்.
ஆற்றின் கரையோரம் படுத்து கிடக்கும் ஆட்டுக் குட்டியை தன்கோரப் பற்களால் கடித்து இழுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிடும்.
அங்கு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி ஏப்பம் விட்டு விடும். அது ஜீரணமாக 2 நாட்கள் ஆகும். அதன்பிறகு மெல்ல மீண்டும் வெளியே வரும். அப்போது ஆட்டு குட்டி கிடைக்காவிட்டால் வருத்தப்படாது.
கோழிக்குஞ்சுகள் சிக்கினால் அதையும் விழுங்கிவிடும். இரவில் அட்டகாசம் செய்யும் முதலைகள் காலை நேரத்தில் செய்யும் அட்டகாசம் அதைவிட அதிகம். என்ன என்கிறீர்களா?
காலையில் காலைக் கடன் முடித்து விட்டு யாராவது ஆற்றில் இறங்கினால் அவர்களது காலை கடித்து குதறி விடும். ஆற்றில் தண்ணீர் அதிகம் வருகிறதே குளிக்கலாம் என்று நினைத்து இறங்கினால் காலை துண்டாக்கிவிடும். சிதம்பரம் பகுதியில் முதலையால் கால் இழந்தவர்கள் பலர் உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழை வெள்ளம் வந்தபோது வீராணம் ஆற்றிலிருந்து ஏராளமான முதலைகள் சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களை அச்சுறுத்தி வந்தன.
மழை காலம் முடிந்த பிறகு முதலையின் அட்டகாசம் குறைந்து விட்டது என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். தற்போது கோடைகாலம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. மேலும் முதலைகள் அட்டகாசம் செய்ய தொடங்கி உள்ளன.
இந்த நேரத்தில் முதலை எப்படி வருகிறது? மழை காலம் முடிந்த பிறகு கொள்ளிடம் ஆறு மற்றும் கான்சாகிப் வாய்க்காலில் முதலைகள் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
அந்த பகுதியில் ஆற்றின் கரையோரம் துளை போட்டு பதுங்கி விடுகின்றன. கோடைகாலம் தொடங்கியதும் ஆற்றில் தண்ணீர் வற்றிய பிறகு இரை தேடி வெளியே வருகின்றன.
அப்போது சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் கிராம மக்கள் தூக்கமில்லாமல் தவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சிதம்பரம் அருகே உள்ள பிள்ளை முத்தாபிள்ளை சாவடி கிராமத்தில் ஒரு முதலை ஊருக்குள் புகுந்தது.
வனத்துறையினர் அதை மடக்கிப் பிடித்து சிதம்பரத்தில் உள்ள வக்கார மாரி குளத்தில் கொண்டுவிட்டனர். தற்போது மீண்டும் அதே பகுதியில் மீண்டும் மற்றொரு முதலை கிராமத்துக்குள் நுழைந்தது. வனத்துறையினர் அதை பிடித்து வக்காரமாரி குளத்தில் கொண்டு போய் விட்டனர். இந்த குளத்தில் 100–க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.
அந்த குளத்தில் மீன்களை அவை சாப்பிட்டு வருகின்றன. இந்த குளத்தில் இருந்து கான்சாகிப் வாய்க்காலுக்கு முதலைகள் தப்பி வந்து விடுகின்றன என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
ஊருக்குள் படையெடுக்கும் முதலைகளால் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் பகுதியில் உள்ள கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை தடுக்க என்ன செய்யலாம்? சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணைகள் அரசு அமைக்க வேண்டும். அங்கிருந்து அவை தப்பிச் செல்லா வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? அவர்களின் அச்சம் தீருமா?
Next Story






