என் மலர்
செய்திகள்

காரைக்குடி அருகே சமையல்காரர் தற்கொலை
காரைக்குடி அருகே நெஞ்சுவலியால் அவதிப்பட்ட சமையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகப்பசெட்டியார் தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது48), சமையல்காரர்.
இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லையாம். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஞானவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின்பேரில் பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






