என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் பதட்டமான 109 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பதட்டமான 109 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 354 சமூக விரோதிகள் மீது பாதுகாப்பு நடவடிக்கை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 92 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற 334 துப்பாக்கிகளும், 299 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனைத்து வெடிமருந்து கிடங்குகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு அக்கிடங்குகள் கண்காணிப்பில் இருந்து வருகின்றன.
இதுவரை வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடை செய்யும் பொருட்டும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது சம்பந்தமாகவும் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கடந்த 11–ந்தேதி முதல் மாவட்டத்தில் 148 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடமாடும் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 148 மண்டலங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அடிக்கடி சென்று கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் 14 சிறப்பு பறக்கும் படைகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு வாக்குப்பதிவு முடியும் வரை தொடர்ந்து கண்காணிப்பில் இயங்கி வருவார்கள்.
மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க வேண்டியும் மாவட்டத்தில் சட்டம்– ஒழுங்கு காவலர்கள், மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகியவற்றை சேர்ந்த 1500 காவலர்களும், 250 ஊர்க்காவல் படையினரும், முன்னாள் ராணுவப் படை வீரர்கள், தீயணைப்புத்துறையினர், காவல்துறையைச் சாராதவர்கள் ஆகியோர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட உள்ளார்கள். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய சேமநலப் படைகளிலிருந்து 9 கம்பெனிகள் பாகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவின்போது ஏற்படும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க காவல் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 15 அதிரடிப் படைகள் நியமக்கப்பட்டுள்ளன.
898 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ள 2057 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. இவற்றுள் 109 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்டு அம்மையங்களில் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 354 சமூக விரோதிகள் மீது பாதுகாப்பு நடவடிக்கை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 92 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற 334 துப்பாக்கிகளும், 299 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனைத்து வெடிமருந்து கிடங்குகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு அக்கிடங்குகள் கண்காணிப்பில் இருந்து வருகின்றன.
இதுவரை வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடை செய்யும் பொருட்டும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது சம்பந்தமாகவும் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு கடந்த 11–ந்தேதி முதல் மாவட்டத்தில் 148 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடமாடும் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 148 மண்டலங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அடிக்கடி சென்று கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் 14 சிறப்பு பறக்கும் படைகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு வாக்குப்பதிவு முடியும் வரை தொடர்ந்து கண்காணிப்பில் இயங்கி வருவார்கள்.
மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க வேண்டியும் மாவட்டத்தில் சட்டம்– ஒழுங்கு காவலர்கள், மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகியவற்றை சேர்ந்த 1500 காவலர்களும், 250 ஊர்க்காவல் படையினரும், முன்னாள் ராணுவப் படை வீரர்கள், தீயணைப்புத்துறையினர், காவல்துறையைச் சாராதவர்கள் ஆகியோர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட உள்ளார்கள். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய சேமநலப் படைகளிலிருந்து 9 கம்பெனிகள் பாகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவின்போது ஏற்படும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க காவல் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 15 அதிரடிப் படைகள் நியமக்கப்பட்டுள்ளன.
898 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ள 2057 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. இவற்றுள் 109 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்டு அம்மையங்களில் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Next Story






