என் மலர்
செய்திகள்

தே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
தமிழக மக்கள் விரும்பும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில் கூறினார்.
புதுக்கோட்டை:
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் நடைபெற்ற தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. தேர்தல் பிரசார மாநாடு பெரும் வெற்றி பெற்றதற்கு மக்கள் மாற்றத்தை விரும்புவதே காரணம். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை சாராத மாணவர்கள், இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
1971-ல் இருந்து தேர்தல் பணியாற்றி வரும் நான் இந்த தேர்தலில்தான் மக்களிடையே புதிய அணுகுமுறையை பார்க்கிறேன். களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் இருக்கின்ற போதிலும் பொதுமக்கள் அனைவரும் மக்கள் நலக்கூட்டணியை விரும்புகின்றனர்.
பேரவை தேர்தலில் தமிழக மக்கள் விரும்பும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா. கா. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தொங்கு சட்டப்பேரவை என்ற பேச்சுக்கே இடமில்லை.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. தேர்தல் ஆணையர் சகாயம் போல் நேர்மையானவர் என்பதால் 100 சதவிகித வாக்குப்பதிவு வாக்குகளை விற்கக் கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்து வருவது வரவேற்கத்தக்கது
பணப்புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் கரூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பறிமுதல் செய்த தொகை எவ்வளவு என்பதில் மர்மம் நீடிக்கிறது. ஒட்டன்சத்திரம் தி.மு.க. வேட்பாளர் பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டும் அவரை கைது செய்யவில்லை.
தாங்கள் செய்துள்ள சாதனைகள் மீதும், திட்டங்கள் மீதும் நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் பணத்தை மட்டும் நம்பி ஜனநாயக சீர்குலைவை தி.மு.க. அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாங்கள் கண்காணிப்பு குழு அமைத்திருக்கிறோம். எனினும் பணம் கொடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. பணம் கொடுத்து தான் வாக்குகளை பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ள அரசியல் கட்சிகள் வெட்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் நடைபெற்ற தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. தேர்தல் பிரசார மாநாடு பெரும் வெற்றி பெற்றதற்கு மக்கள் மாற்றத்தை விரும்புவதே காரணம். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை சாராத மாணவர்கள், இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
1971-ல் இருந்து தேர்தல் பணியாற்றி வரும் நான் இந்த தேர்தலில்தான் மக்களிடையே புதிய அணுகுமுறையை பார்க்கிறேன். களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் இருக்கின்ற போதிலும் பொதுமக்கள் அனைவரும் மக்கள் நலக்கூட்டணியை விரும்புகின்றனர்.
பேரவை தேர்தலில் தமிழக மக்கள் விரும்பும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா. கா. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தொங்கு சட்டப்பேரவை என்ற பேச்சுக்கே இடமில்லை.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. தேர்தல் ஆணையர் சகாயம் போல் நேர்மையானவர் என்பதால் 100 சதவிகித வாக்குப்பதிவு வாக்குகளை விற்கக் கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்து வருவது வரவேற்கத்தக்கது
பணப்புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் கரூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பறிமுதல் செய்த தொகை எவ்வளவு என்பதில் மர்மம் நீடிக்கிறது. ஒட்டன்சத்திரம் தி.மு.க. வேட்பாளர் பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டும் அவரை கைது செய்யவில்லை.
தாங்கள் செய்துள்ள சாதனைகள் மீதும், திட்டங்கள் மீதும் நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் பணத்தை மட்டும் நம்பி ஜனநாயக சீர்குலைவை தி.மு.க. அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாங்கள் கண்காணிப்பு குழு அமைத்திருக்கிறோம். எனினும் பணம் கொடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. பணம் கொடுத்து தான் வாக்குகளை பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ள அரசியல் கட்சிகள் வெட்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






