என் மலர்
செய்திகள்

கடலூரில் பிரசாரம்: அமைச்சர் சம்பத் வேன் மீது செருப்பு வீச்சு
கடலூரில் இன்று பிரசாரம்: அமைச்சர் சம்பத் வேன் மீது செருப்பு வீச்சு
கடலூர்:
கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் சம்பத் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை 10.15 மணி அளவில் தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அந்த பகுதி மக்கள் எங்களுக்கு வெள்ள நிவாரணம் ஏதும் வழங்கவில்லை என்று அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் சம்பத் அவர்களை சமரசம் செய்தார்.
பின்னர் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் அமைச்சர் சம்பத்தின் வேன் மீது செருப்பை வீசினார். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் அந்த வாலிபரை அடித்து உதைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






