என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குபதிவு குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்ப மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
    X

    வாக்குபதிவு குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்ப மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

    வாக்குபதிவு குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்ப மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தொடர்பான குறுஞ்செய்தி அனுப்புவது குறித்து அனைத்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேசிய தகவலியல் மையம் சார்பில் நடந்தது.

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி இந்த பயிற்சி வகுப்பில் மே-16 அன்று தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு மையங்களில் காலை 7- மணி முதல் மாலை 6-மணி வரை நடைபெறும் அனைத்து தேர்தல் தொடர்பான நிகழ்வுகளும் உடனுக்குடன் குறுஞ்செய்தி அனுப்புவதற்கான பயிற்சி வகுப்புகள் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அளிக்கப்பட்டது. 

    இதில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றடைந்த தகவல், மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்ற தகவல், வாக்குப்பதிவு தொடங்கிய தகவல், வாக்குப்பதிவின் நிலவரம், வாக்குப்பதிவு முடிவுற்ற தகவல், தேர்தலில் பதிவான ஆண், பெண் வாக்காளர்களின் நிலவரம் போன்ற பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரியப்படுத்தும் வகையில் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 

    இந்த மண்டல அலுவலர்கள் தங்களது மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு தொடர்பான குறுஞ்செய்தி அனுப்புவது குறித்தும் பயிற்சி அளிக்க உள்ளனர். 

    இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட  தகவலியல் அலுவலர் மு.தமிழ்ச்செல்வன், கூடுதல் மாவட்ட தகவலியல் அலுவலர் ச.விக்டர், உதவி ஆணையர் (கலால்) திரு.பாலாஜி, தனித்துணை ஆட்சியர் பஞ்சவர்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×