என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே லாரிகள் மோதி விபத்து: டிரைவர் பலி
சிவகங்கை அருகே லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் மதுரை டிரைவர் பலியானார்.
சிவகங்கை:
மதுரையில் இருந்து காளையார்கோவில் நோக்கி பெட்ரோல் டேங்கர் லாரி இன்று அதிகாலை சென்றது. மதுரையை சேர்ந்த கருப்பசாமி (வயது52) லாரியை ஓட்டி சென்றார்.
சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டை பகுதியில் லாரி சென்றபோது எதிரே காளையார்கோவிலில் இருந்து டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். 2 லாரிகளிலும் வந்த காசி, ராமன், சரவணன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொன்ரகு, மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் இருந்து காளையார்கோவில் நோக்கி பெட்ரோல் டேங்கர் லாரி இன்று அதிகாலை சென்றது. மதுரையை சேர்ந்த கருப்பசாமி (வயது52) லாரியை ஓட்டி சென்றார்.
சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டை பகுதியில் லாரி சென்றபோது எதிரே காளையார்கோவிலில் இருந்து டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். 2 லாரிகளிலும் வந்த காசி, ராமன், சரவணன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொன்ரகு, மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






