என் மலர்
செய்திகள்

திருப்பத்தூர் அருகே பஞ்சு நூல் ஆலையில் தீ விபத்து
திருப்புத்தூர் அருகே உள்ள நூல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பணியாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உடையநாதபுரம் என்ற இடத்தில் ஒரு பஞ்சு நூல்ஆலை உள்ளது. இங்கு சுமார் 500 பணியாளர்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
இரண்டு கட்டிடங்களாக உள்ள இந்த ஆலையில் முதல் கட்டிடத்தில் பஞ்சு நூற்கும் வேலையும், இரண்டாவது கட்டிடத்தில் நூற்கப்பட்ட பஞ்சை நூலாக மாற்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
நேற்று பணியில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இருக்கும் பொழுது அடியில் உள்ள கழிவு பஞ்சுகளில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த பணியாளர்கள் ஆலையை விட்டு வெளியே வந்து மில் மேலாளரிடம் தெரிவித்தனர். உடனே மேலாளர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையில் வந்து கழிவுகளில் ஏற்பட்டுள்ள புகை மூட்டைத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக திருப்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உடையநாதபுரம் என்ற இடத்தில் ஒரு பஞ்சு நூல்ஆலை உள்ளது. இங்கு சுமார் 500 பணியாளர்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
இரண்டு கட்டிடங்களாக உள்ள இந்த ஆலையில் முதல் கட்டிடத்தில் பஞ்சு நூற்கும் வேலையும், இரண்டாவது கட்டிடத்தில் நூற்கப்பட்ட பஞ்சை நூலாக மாற்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
நேற்று பணியில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இருக்கும் பொழுது அடியில் உள்ள கழிவு பஞ்சுகளில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த பணியாளர்கள் ஆலையை விட்டு வெளியே வந்து மில் மேலாளரிடம் தெரிவித்தனர். உடனே மேலாளர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையில் வந்து கழிவுகளில் ஏற்பட்டுள்ள புகை மூட்டைத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக திருப்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






