என் மலர்
செய்திகள்

தேவகோட்டை அருகே வாகனம் மோதி சித்த மருத்துவர் பலி
வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற சித்த மருத்துவர் பலியானார்.
தேவகோட்டை:
தேவகோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் சிவம் (வயது55), சித்த மருத்துவர். இவருக்கு 2 மனைவிகளும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியில் சிவம் சொந்தமாக கிளீனிக் நடத்தி வந்தார்.
நேற்று மாலை வீட்டில் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சிவம் புறப்பட்டார். மொபட்டில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வில்லை.
இந்த நிலையில் ஆராவயல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில் அருகே ரத்த காயங்களுடன் சிவம் பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஆராவயல் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது வாகனம் மோதிய விபத்தில் அவர் பலியாகி இருப்பது தெரிய வந்தது.
அவர் மீது மோதிய வாகனம் எது என்பது குறித்த ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






