என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் இன்று ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்கள் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் சிக்கியது
    X

    சீர்காழியில் இன்று ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்கள் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் சிக்கியது

    சீர்காழியில் இன்று ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்கள் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் சிக்கியது

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை துணை தாசில்தார் சித்ரா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மதிகுமார், தலைமை காவலர்கள் சோமசுந்தரம், ராஜசேகரன் ஆகியோர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த மினிலாரி புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்வதும், அட்டை பெட்டிகளில் விலை உயர்ந்த ஸ்மார்ட் செல்போன்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி மினிலாரியை ஓட்டி வந்த திருப்பனந்தாளை சேர்ந்த சுதாகரிடம் விசாரித்தபோது உரிய ஆவணம் இன்றி செல்போன்கள் எடுத்து செல்வது தெரிந்தது.

    இதையடுத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்களை பறிமுதல் செய்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழியிடம் அதனை பறக்கும்படை அலுவலர்கள் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டிய பிறகு செல்போன்களை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×