என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனையின்போது ரூ.4 லட்சம் பறிமுதல்
    X

    ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனையின்போது ரூ.4 லட்சம் பறிமுதல்

    ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனையின்போது அனுமதியின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் கருவூலத்தில் ஒப்படைப்பு

    ஜெயங்கொண்டம் :

    உடையார்பாளையம் புது பேருந்து நிலையம் அருகே தேர்தல் கண்காணிப்புக்குழு தாசில்தார் தாரகேஸ்வரி தலைமையில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சஞ்சீவிகுமார், பாரி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தத்தனூரிலிருந்து, இடையார் நோக்கி சென்ற உடையார்பாளையம் அருகேயுள்ள தனியார் முந்திரிக் கொட்டை தொழிற் சாலைக்கு சொந்தமான மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கோழிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு மகன் சத்தியநாதன் (வயது31) என்பவர் உரியஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 500 வைத்திருந்தது தொரியவந்தது.

    இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல்செய்து ஜெயங்கொண்டம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    அதேபோல் ஜெயங்கொண்டம் – தா.பழூர் சாலை அணைக்குடம் அருகே தேர்தல் நிலையாக கண்காணிப்புகுழு துணை வட்டாட்சியர் கிருஷ் ணமூர்த்தி, போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், தலைமைக் காவலர் ஜெகதீசன், காவலர் பழனிவேல் ஆகியோர் கொண்ட குழு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பண்ருட்டியிலிருந்து, காசாங்கோட்டை நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் பண்ருட்டி அருகேயுள்ள தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி மகன் பிரேம்குமார் என்பவர் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்காக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது.

    ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவண இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×