என் மலர்
செய்திகள்

வேலூர் அ.தி.மு.க. கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை
வேலூர் அ.தி.மு.க. கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க.வின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த எம்.உஷாநந்தினி (54-வது வார்டு கவுன்சிலர்) அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனக்கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க.வின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த எம்.உஷாநந்தினி (54-வது வார்டு கவுன்சிலர்) அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனக்கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
Next Story






