என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே மனைவி மீது தீ வைத்து கொளுத்திய கணவர் கைது
    X

    சீர்காழி அருகே மனைவி மீது தீ வைத்து கொளுத்திய கணவர் கைது

    சீர்காழி அருகே குடிப்பழக்கம் தகராறில் மனைவி மீது தீ வைத்து கொளுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே புதுப்பட்டினம் மடவாமேடு சாலையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி விஜி என்கிற விஜயலட்சுமி (வயது28).

    ராமலிங்கம் பைப் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாம். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கத்தின் தம்பி அவரது சட்டை பையில் வைத்திருந்த பணத்தை காணாமல் தேடியுள்ளார். இதைப்பார்த்த விஜி, தனது கணவரிடம் நீங்கள் பணத்தை எடுத்து சென்று குடித்து விட்டீர்களா? என்று கேட்டாராம்.

    இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது.

    இதில் உடலில் பலத்த தீக்காயமடைந்த விஜியை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×