என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் கம்பத்தில் ஆம்னி பஸ் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி
    X

    மின் கம்பத்தில் ஆம்னி பஸ் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

    மின் கம்பத்தில் ஆம்னி பஸ் மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி போலீசார் விசாரணை

    குத்தாலம்:

    சென்னையில் இருந்து பேராவூரணிக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது.

    இன்று அதிகாலை 3 மணியளவில் மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் நெய்குப்பை என்ற இwwடத்தில் வளைவில் வேகமாக வந்து திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் மின் கம்பம் 2 துண்டானது. அதன் பின்னரும் கட்டுப்பாட்டுக்குள் வராமல் அருகில் உள்ள குளத்தின் ஓரத்தில் சிக்கி நின்றது.

    விபத்தில் மன்னார்குடியை சேர்ந்த விஜய் ஆண்டனி மகள்கள் ஜான்சி மீனா (4), சாதனா சுபஸ்ரீ (3 மாதம்) மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த நாடிமுத்து ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

    29 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் வினோத் என்பவர் கால் துண்டானது. காயம் அடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த 8 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    டிரைவர் தூக்ககலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×