என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை அருகே ஏ.டி.எம். வாகனத்தில் ரூ. 1 கோடி பறிமுதல்
மயிலாடுதுறை அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப சென்ற வாகனத்தில் ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை :
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் கடை வீதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரியான தனி தாசில்தார் சாந்தி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்பும் வாகனம் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 1 கோடி இருந்தது.
இது குறித்து விசாரித்த போது கும்பகோணம் ஸ்டேட் வங்கியில் இருந்து மயிலாடுதுறையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 1 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை மயிலாடுதுறை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.உரிய ஆவணத்தை அளித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தாசில்தார் தெரிவித்தார்.
Next Story






