என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே விஷ இலையை சாப்பிட்டு பெண் இறந்தார்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள செட்டிக்குழிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி தங்கபொண்ணு (வயது 27). இருவருக்கும் கடந்த 2009–ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.
குடும்ப பிரச்சணை காரணமாக கணவன், மனைவிக்குள் கருத்துவேறுபாடு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் அண்ணனின் திருமணத்திற்கு சென்றவர் தனது வீட்டிற்கு செல்லாமல் நல்லணம் கிராமத்தில் உள்ள தங்கை ஈஸ்வரி வீட்டில் தங்கிவிட்டார். மன உலைச்சலில் இருந்த தங்கபொண்ணு அப்பகுதி காட்டுக்குள்சென்று சென்று விஷஇலையை பரித்து வந்து அறைத்து குடித்துள்ளார். இதனால் அவர் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இந்தசம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் மன உலைச்சலில்தான் இறந்தாரா? அல்லது வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என ஆர்.டி.ஓ ராஜகோபாலன் விசாரித்து வருகின்றார்.






