என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன் தேர்தல் நன்னடத்தை ஆலோசனைக் கூட்டம்
    X

    அரியலூரில் கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன் தேர்தல் நன்னடத்தை ஆலோசனைக் கூட்டம்

    அரியலூர் மாவட்டத்தில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன் தேர்தல் நன்னடத்தை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயலர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கடைபிடித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவணவேல்ராஜ் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:–

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம், விவசாயிகள், வங்கி கடன்தாரர்கள், உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள் ஆகியோருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை, உறுப்பினர்கள் அனாமத்து கணக்கில் விதிமுறைகளுக்கு புறம்பாக பணம் நிலுவை வைத்துக்கொள்ளக்கூடாது, அரசியல் தலைவர்களின் போட்டோக்கள் அகற்றப்பட வேண்டும். அரசியல், விளம்பரங்கள், சுவர் ஒட்டிகள், சங்க வளாகத்தில் இருக்கக்சுகூடாது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவணவேல்ராஜ் கூறினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்.ரவீந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாபு, துணைப்பதிவாளர் பொது விநியோகத்திட்டம் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×