என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டில் தெறி பட சி.டி. விற்ற வாலிபர் கைது
    X

    செங்கல்பட்டில் தெறி பட சி.டி. விற்ற வாலிபர் கைது

    செங்கல்பட்டில் தெறி பட சி.டி. விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ படம் கடந்த 14–ந்தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் சில தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் ‘தெறி’ பட திருட்டு சி.டி. விற்கப்படுவதாக நகர விஜய் மக்கள் இயக்க தலைவர் பூக்கடை ஜின், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பாலாஜி உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டோர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜோசப்பிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் தீவிர கண்காணப்பில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்பட்டு ராஜாஜி தெருவில் உள்ள கடையில் ‘தெறி’ பட சி.டி. விற்பது தெரிந்தது.

    போலீசார் விரைந்து சென்று செங்கல்பட்டு பெரியமணியக்காரர் தெருவை சேர்ந்த முருகனை கைது செய்தனர். அவனிடம் இருந்து 15 ‘தெறி’ பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்கல்பட்டு பகுதியில் தெறி படம் ரிலீசாகாத நிலையில் படத்தின் திருட்டு சி.டி. விற்கப்படுவது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×