என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் சட்டசபை தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. போட்டி தொண்டர்கள் உற்சாகம்
    X

    சிதம்பரம் சட்டசபை தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. போட்டி தொண்டர்கள் உற்சாகம்

    சிதம்பரம் சட்டசபை தொகுதி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    சிதம்பரம் சட்ட சபை தொகுதிக்கு முதல் தேர்தல் கடந்த 1952–ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தல் முதல் 1967–ம் ஆண்டு வரை நடந்த 4 சட்ட சபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

    பின்னர் 1971, 1977, 1989, 2001 ஆகிய வருடங்களில் நடந்த சட்ட சபை தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் கடந்த 2006 மற்றும் 2011–ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் இந்த தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

    10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற உள்ள தேர்தலில் சிதம்பரம் தொகுதி மீண்டும் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த தொகுதி தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    Next Story
    ×