என் மலர்
செய்திகள்

செட்டிநாடு அருகே வீடு புகுந்து பணம்– பொருட்கள் திருட்டு
வீடு புகுந்து பணம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சிவகங்கை:
காரைக்குடி தாலுகா செட்டிநாடு அருகே உள்ள கொட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது72), சைக்கிள் கடை வைத்துள்ளார்.
இவர் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் பின்புறம் வழியாக புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
இது குறித்து செட்டிநாடு போலீசில் அருணாச்சலம் புகார் செய்தார். அதில் வீட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்கள், புடவைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொள்ளைபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.44 ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செட்டிநாடு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் அமுது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.
Next Story






