என் மலர்
செய்திகள்

பிள்ளையார்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் பிரசாரம்
பிள்ளையார்பட்டியில் அசோகன் தலைமையில் அ.தி.மு.க. கட்சியினர் நடை பயணமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பாளராக அசோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி அசோகன் தனது தேர்தல் பிரசாரத்தை பிள்ளையார்பட்டியில் இருந்து தொடங்கினார். முன்னதாக பிள்ளையார்பட்டி வந்த அ.தி.மு.க. வேட்பாளர் அசோகன் தலைமையிலான கட்சியினர் கற்பக விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பிள்ளையார்பட்டி பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அசோகன் தலைமையில் கட்சியினர் நடை பயணமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிரசாரத்தில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், நகரச் செயலாளர் இப்ராம்ஷா, பேரூராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம், ஒன்றியத் துணைச் செயலாளர் முருகேசன், ஒன்றிய துணைத் தலைவர் பத்மநாதன், சிதம்பரம், நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், முருகானந்தம் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பாளராக அசோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி அசோகன் தனது தேர்தல் பிரசாரத்தை பிள்ளையார்பட்டியில் இருந்து தொடங்கினார். முன்னதாக பிள்ளையார்பட்டி வந்த அ.தி.மு.க. வேட்பாளர் அசோகன் தலைமையிலான கட்சியினர் கற்பக விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பிள்ளையார்பட்டி பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அசோகன் தலைமையில் கட்சியினர் நடை பயணமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிரசாரத்தில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், நகரச் செயலாளர் இப்ராம்ஷா, பேரூராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம், ஒன்றியத் துணைச் செயலாளர் முருகேசன், ஒன்றிய துணைத் தலைவர் பத்மநாதன், சிதம்பரம், நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், முருகானந்தம் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
Next Story






