என் மலர்
செய்திகள்

அணைக்கரை அருகே பைக் மோதி முதியவர் பலி
அணைக்கரை அருகே பைக் மோதி முதியவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம் நடுகஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக அணைக்கரை கடைவீதிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த விஸ்வநாதனை பொதுமக்கள்மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சைபலனின்றி இறந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி எஸ்.ஐ. நடேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






