என் மலர்
செய்திகள்

ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் பலியான ஜெயங்கொண்டம் அதிமுக தொண்டர்
விருத்தாசலத்தில் நேற்று நடந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டத்தில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (40) என்பவர் மயங்கி விழுந்து பலியானார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தினர் மூழ்கினர்.
ஜெயங்கொண்டம்:
ராதாகிருஷ்ணன் ஜெயங்கொண்டம் கட்சிப்பெருமாள் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி. காயத்ரி (11), பிரியங்கா (10) என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் 6 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே சலூன் கடை வைத்து நடத்தி வந்த ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அ.தி.மு.க. மீது தீவிர பற்றுக் கொண்டவர்கள்.
ராதாகிருஷ்ணன் கட்சியில் பதவி வகிக்கவில்லையென்றாலும் அடிமட்ட தொண்டராக இருந்து கட்சி பணியாற்றி வந்தார். உள்ளூரில் நடைபெறும் எந்த அ.தி.மு.க. கூட்டங்கள் என்றாலும் அதில் பங்கேற்பார். சலூன் கடை நடத்தி வருவதால் வெளியூர்களில் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களுக்கு செல்வது கிடையாது. நேற்று விருத்தாச்சலத்தில் நடைபெற்ற முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் அவரை அழைத்துள்ளனர்.
இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்த அவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக அ.தி.மு.க. கட்சி கரை போட்ட வேட்டி ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். அதனை அணிந்து கொண்டு நேற்று காலை 10.30 மணிக்கே அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்களுடன் வேனில் விருத்தாச்சலத்திற்கு சென்று விட்டார். கூட்டத்திற்கு செல்வது குறித்து வீட்டில் யாரிடமும் கூறவில்லையாம். எப்போதும் காலை 6 மணிக்கு கடையை திறக்கும் அவர் காலை 10 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட செல்வது வழக்கம். நேற்று அவர் வீட்டிற்கு வராததால் ராஜேஸ்வரி, கணவர் ராதாகிருஷ்ணனுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போது அவர் தான், விருத்தாச்சலம் அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்திற்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பாதுகாப்பாக சென்று வருமாறு கணவரிடம் ராஜேஸ்வரி கூறியுள்ளார்.
இந்தநிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற ராதாகிருஷ்ணனுக்கு திடீரென சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக அவர்கள் வந்த வேனுக்கு சென்று தூங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து கூட்ட நடைபெறும் இடத்திற்கு சென்றார். அப்போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சிலர் அவரது சட்டைப்பையில் இருந்த டைரியை எடுத்து பார்த்துள்ளனர். அதில் இருந்த அவரது மனைவியின் செல்போனுக்கு, ராதாகிருஷ்ணன் மயங்கி கிடப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே அவர், ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு தெரிவித்துள்ளார். தானும் உடனே வருவதாக கூறியுள்ளார். இதனிடையே அங்கு வந்த அ.தி.மு.க.வினர் ராதாகிருஷ்ணனை மீட்டு விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன் இறந்த தகவலை கேட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். அவர்களுக்கு அ.தி. மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆறுதல் கூறினர். ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் என்ற சகோதரரும், ரதி என்ற சகோதரியும் உள்ளனர். ரமேஷ் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். ரதி திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார்.
ராதாகிருஷ்ணன் ஜெயங்கொண்டம் கட்சிப்பெருமாள் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி. காயத்ரி (11), பிரியங்கா (10) என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் 6 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே சலூன் கடை வைத்து நடத்தி வந்த ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அ.தி.மு.க. மீது தீவிர பற்றுக் கொண்டவர்கள்.
ராதாகிருஷ்ணன் கட்சியில் பதவி வகிக்கவில்லையென்றாலும் அடிமட்ட தொண்டராக இருந்து கட்சி பணியாற்றி வந்தார். உள்ளூரில் நடைபெறும் எந்த அ.தி.மு.க. கூட்டங்கள் என்றாலும் அதில் பங்கேற்பார். சலூன் கடை நடத்தி வருவதால் வெளியூர்களில் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களுக்கு செல்வது கிடையாது. நேற்று விருத்தாச்சலத்தில் நடைபெற்ற முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் அவரை அழைத்துள்ளனர்.
இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்த அவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக அ.தி.மு.க. கட்சி கரை போட்ட வேட்டி ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். அதனை அணிந்து கொண்டு நேற்று காலை 10.30 மணிக்கே அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்களுடன் வேனில் விருத்தாச்சலத்திற்கு சென்று விட்டார். கூட்டத்திற்கு செல்வது குறித்து வீட்டில் யாரிடமும் கூறவில்லையாம். எப்போதும் காலை 6 மணிக்கு கடையை திறக்கும் அவர் காலை 10 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட செல்வது வழக்கம். நேற்று அவர் வீட்டிற்கு வராததால் ராஜேஸ்வரி, கணவர் ராதாகிருஷ்ணனுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போது அவர் தான், விருத்தாச்சலம் அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்திற்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பாதுகாப்பாக சென்று வருமாறு கணவரிடம் ராஜேஸ்வரி கூறியுள்ளார்.
இந்தநிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற ராதாகிருஷ்ணனுக்கு திடீரென சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக அவர்கள் வந்த வேனுக்கு சென்று தூங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து கூட்ட நடைபெறும் இடத்திற்கு சென்றார். அப்போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சிலர் அவரது சட்டைப்பையில் இருந்த டைரியை எடுத்து பார்த்துள்ளனர். அதில் இருந்த அவரது மனைவியின் செல்போனுக்கு, ராதாகிருஷ்ணன் மயங்கி கிடப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே அவர், ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு தெரிவித்துள்ளார். தானும் உடனே வருவதாக கூறியுள்ளார். இதனிடையே அங்கு வந்த அ.தி.மு.க.வினர் ராதாகிருஷ்ணனை மீட்டு விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன் இறந்த தகவலை கேட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். அவர்களுக்கு அ.தி. மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆறுதல் கூறினர். ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் என்ற சகோதரரும், ரதி என்ற சகோதரியும் உள்ளனர். ரமேஷ் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். ரதி திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார்.
Next Story






