என் மலர்
செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்
லாரி மோதி வாலிபர் பலி டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் சீனிவாச நகரை சேர்ந்தவர் அரிதாஸ். இவர் கடந்த 2009 ஆண்டு வேளச்சேரி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது டிப்பர் லாரி மோதி பலியானார்.
விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திரிசூலம் இந்திரா நகரை சேர்ந்த சாந்தகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை 4–வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து நீதிபதி ஆபிரகாம்லிங்கன் தீர்ப்பளித்தார். அதில் விபத்து ஏற்படுத்திய டிரைவர் சாந்தகுமாருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Next Story






