என் மலர்
செய்திகள்

விழிப்புணர்வு பிரசாரம்: பாராசூட்டில் பறந்த நாகை கலெக்டர்
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகை கலெக்டர் பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வான்குடையில் பறக்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் புதியக் கடற்கரையில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பழனிசாமி, வான்குடையில் பறந்து வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
"தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த பாராளுமன்ற தேர்தலில் மிகக்குறைவான வாக்குபதிவு நடைபெற்ற 138 வாக்குசாவடி மையங்களை இலக்காக வைத்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தெருமுனைப்பிரசாரம், தெருமுனை நாடகம், பேரூந்து போன்ற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், மனித சங்கிலி, விழிப்புணர்வு பேரணி போன்றவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விழிப்புணர்வின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பின்னர் வேதாரண்யம் கடற்கரையிலும் நடந்தது. மயிலாடு துறையிலுள்ள ராஜன் தோட்டத்திலும் பாராசூட்டில் பறந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவ- மாணவிகள் வான் குடையில் பறந்து புதிய வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகேந்திரன், தாசில்தார் இளங்கோவன் அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வான்குடையில் பறக்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் புதியக் கடற்கரையில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பழனிசாமி, வான்குடையில் பறந்து வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
"தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த பாராளுமன்ற தேர்தலில் மிகக்குறைவான வாக்குபதிவு நடைபெற்ற 138 வாக்குசாவடி மையங்களை இலக்காக வைத்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தெருமுனைப்பிரசாரம், தெருமுனை நாடகம், பேரூந்து போன்ற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், மனித சங்கிலி, விழிப்புணர்வு பேரணி போன்றவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விழிப்புணர்வின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பின்னர் வேதாரண்யம் கடற்கரையிலும் நடந்தது. மயிலாடு துறையிலுள்ள ராஜன் தோட்டத்திலும் பாராசூட்டில் பறந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவ- மாணவிகள் வான் குடையில் பறந்து புதிய வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகேந்திரன், தாசில்தார் இளங்கோவன் அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






