என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அருகே சிக்னல் வயரில் பழுது: சென்னை ரெயில்கள் தாமதம்
    X

    செங்கல்பட்டு அருகே சிக்னல் வயரில் பழுது: சென்னை ரெயில்கள் தாமதம்

    செங்கல்பட்டு அருகே சிக்னல் வயரில் பழுது ஏற்பட்டதால் சென்னை வரும் ரெயில்கள் தாமதமாக வந்தன.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த கொளவாய் ஏரி அருகே தண்டவாளத்தில் உள்ள சிக்னல் வயரில் பழுது ஏற்பட்டு இருந்தது. இதனால் ரெயில்கள் செல்ல சிக்னல் விழவில்லை.

    அந்த நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. உடனடியாக அந்த ரெயில், ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    இதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில்களும் இயக்கப்படவில்லை.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது சிக்னல் வயர் எரிந்து இருந்தது. உடனடியாக சிக்னல் வயரை சரி செய்தனர். பின்னர் சுமார் ½ மணி நேரம் தாமதமாக பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டது.

    மின்சார ரெயில்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதிஅடைந்தனர்.

    ரெயில்கள் வேகமாக சென்ற போது ஏற்பட்ட உராய்வில் சிக்னல் மின்வயர் எரிந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×