என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி உள்பட 2 பெண்கள் மாயம்
    X

    சிறுமி உள்பட 2 பெண்கள் மாயம்

    • காலையில் எழுந்து பெற்றோர்கள் பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த சிறுமியை காணவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி

    தருமபுரி பூமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வயது சிறுமி. இவர் தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த சிறுமி வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றார். காலையில் எழுந்து பெற்றோர்கள் பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த சிறுமியை காணவில்லை.

    இதனால் பதறிபோன சிறுமியின் பெற்றோர் பலஇடங்களில் தேடிபார்த்தனர்.

    எங்கும் தேடியும் கிடைக்காததால் சிறுமி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தந்தை தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மகளை மிட்டாஅள்ளியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சங்கர் என்பவர் அழைத்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் வத்தல்மலை பால்சிலம்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் பரிமளா (வயது21). இவர் பிளஸ்-2 முடித்து வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிைலயில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற பரிமளா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ராமசாமி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×