என் மலர்
உள்ளூர் செய்திகள்

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி
1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
- செக்காரக்குடி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட கிளிகவுண்டர்குளம், செக்காரக்குடி மேலக்குளம் ஆகிய குளங்களில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சுமார் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் மூலமாக பனை விதை நடும் பணி நடந்தது.
செய்துங்கநல்லூர்:
கருங்குளம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட கிளிகவுண்டர்குளம், செக்காரக்குடி மேலக்குளம் ஆகிய குளங்களில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சுமார் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவர் ராமலெட்சுமி தலைமை தரங்கினார். ஸ்டாமின் குடுமியான்மலை இயக்குநர் சங்கரலிங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் மூலமாக பனை விதை நடும் பணி நடந்தது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் ஜெயசெல்வின் இன்பராஜ், வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் பழனிவேலாயுதம், கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன், துணை வேளாண்மை அலுவலர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் செய்திருந்தார்.






