என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்சங் டெக்ஸ்: S8 ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம்
    X

    சாம்சங் டெக்ஸ்: S8 ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம்

    சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த S8 ஸ்மார்ட்போன்களை கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்த அந்நிறுவனம் சாம்சங் டெக்ஸ் என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
    நியூ யார்க்:

    சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களுடன் அந்நிறுவனம் சில புதிய சாதனங்களையும் நேற்று அறிமுகம் செய்தது. அவ்வாறு சாம்சங் அறிவித்த சாதனம் தான் சாம்சங் டெக்ஸ். டெஸ்க்டாப் எக்ஸ்டென்ஷன் என்ற வார்த்தையின் சுருக்கமாக டெக்ஸ் என்ற பெயர் சூட்டுப்பட்டுள்ளது. 

    மைக்ரோசாப்டின் காண்டினியம் போன்று, சாம்சாங் டெக்ஸ் உங்களது ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டருடன் இணைத்து பயன்படுத்த வழி செய்கிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் செயலி, டாக்குமென்ட்களை எடிட் செய்வது, வீடியோக்களை பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெரிய திரையில், கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு பயன்படுத்தலாம். 

    சாம்சங் டெக்ஸ் பெரிய திரை, கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு பயன்படுத்துவதற்கென பிரத்தியேக ஆண்ட்ராய்டு UI வடிவமைக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது. சாம்சங் டெக்ஸ் உருவாக்குவதற்கு மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இதனால் அந்நிறுவன சேவைகளையும் பயன்படுத்த முடியும். 



    புதிய சாதனம் எச்டிஎம்ஐ போர்ட் மூலம் திரையில் இணைந்து கொண்டு, யுஎஸ்பி அல்லது ஆர்எஃப் கேபிள் கொண்டு கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு பயன்படுத்தலாம். இத்துடன் யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் கூலிங் ஃபேன் உள்ளிட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    சில சந்தைகளில் சாம்சங் டெக்ஸ் S8 ஸ்மார்ட்போன்களுடன் இலவசமாக வழங்கப்படலாம் என கூறப்பட்டாலும், தனியே வாங்கும் போது இதன் விலை ரூ.10,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×