என் மலர்
செய்திகள்

திலீப் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி
இந்தி நடிகர் திலீப் குமாரின் இரு சகோதரர்கள் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர்.
மும்பை:
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் (வயது 98). முதுமை காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், திலீப் குமாருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக இதே மருத்துவமனையில் நடிகர் திலீப் குமார் அனுமதிக்கப்பட்டார். அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Next Story






