என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்யா பானர்ஜி (வலதுபக்கம்)
    X
    ஆர்யா பானர்ஜி (வலதுபக்கம்)

    ’தி டர்ட்டி பிக்சர்’ பட நடிகை பூட்டிய வீட்டில் பிணமாக மீட்பு

    ‘தி டர்ட்டி பிக்சர்’ பட நடிகைகளில் ஒருவரான ஆர்யா பானர்ஜி தனது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
    கொல்கத்தா:

    தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவர் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை இந்தியில் ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர். 

    2011-ம் ஆண்டு வெளியான அந்த சில்க் சுமிதா காதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை வித்யாபாலன். அந்த திரைப்படத்தில் கதாநாயகியான வித்யாபாலனுடன் இணைந்து துணைகதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்யா பானர்ஜி.

    மேற்குவங்காளத்தை ஆர்யா பானர்ஜி சேர்ந்த இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ’லவ் செக்ஸ் அர் டோஹா’ என்ற இந்திபடத்திலும் நடத்து பிரபலமானார். இவர் மும்பையில் மாடலிங் துறையிலும் குறிப்பிடத்தக்க பிரபலமான நபராக இருந்து வந்தார். 

    33-வயதான ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள ஒரு அப்பாட்மெண்டில் தனியாக வசித்துவந்தார். அவர் தனது வீட்டு வேலைக்கு மட்டுமே 
    ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளார். 

    இந்நிலையில், வழக்கம்போல இன்றும் அந்த பணிப்பெண் வீட்டுவேலை செய்வதற்காக ஆர்யா பானர்ஜியின் வீட்டிற்கு வந்து வாசலில் இருந்த காலிங் பெல்லை அடித்துள்ளார். 

    ஆர்யா பானர்ஜி (

    ஆனால், ஆர்யா கதவை திறக்கவில்லை. உடனடியாக பானர்ஜியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார் செல்போன் அழைப்பையும் ஆர்யா எடுக்கவில்லை. பின்னர் கதவை வேகமாக தட்டிய அந்த பணிப்பெண்
    அக்கம்பக்கத்தினருக்கு அழைத்துள்ளார். அவர்களும் கதவை தட்டியுள்ளனர். ஆனால், ஆர்யா பானர்ஜி கதவை திறக்கவே இல்லை. 

    இதனால், சந்தேகமடைந்த பணிப்பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, ஆர்யா பானர்ஜி குடியிருந்த அப்பாட்மெண்ட்டிற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். 

    அங்கு பூட்டிய வீட்டில் நடிகை ஆர்யா பானர்ஜி தனது படுக்கையறையில் உயிரிழந்தநிலையில் சடலமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உயிரிழந்த ஆர்யா பானர்ஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 

    பிரேதபரிசோதனையின் முடிவிலேயே நடியை ஆர்யா பானர்ஜி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் நடிகையை கொலை செய்துள்ளனரா? என்ற முழுவிவரம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகை ஆரியாவின் மரணம் குறித்து தீவிரவிசாரணை நடத்திவருகின்றனர்.
    Next Story
    ×