என் மலர்
செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் அஜீத் - ஷாலினி அஞ்சலி - வீடியோ உள்ளே
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் நடிகர் அஜீத் இன்று அதிகாலை தனது குடும்பத்தாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் நடிகர் அஜீத் இன்று அதிகாலை தனது குடும்பத்தாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு நேற்று திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
படப்பிடிப்புக்காக பல்கேரியா நாட்டுக்கு சென்றிருந்த நடிகர் அஜீத், நேரடி விமானம் கிடைக்காததால் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும், பல்கேரியாவில் இருந்து அஜீத் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பல்கேரியாவில் இருந்து இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் அஜீத், தனது மனைவி ஷாலினி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் மவுனமாக நின்று அஞ்சலி செலுத்திய அவர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான ‘சோ’ ராமசாமி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை காலமான செய்தியை அறிந்த அஜீத் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சோவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே, படப்பிடிப்புக்கு இடையில் பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு வந்த அஜீத், இன்றுமாலை மீண்டும் பல்கேரியா புறப்பட்டுச் சென்று படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொள்கிறார்.
அஞ்சலி செலுத்துவதற்காக அஜித் வந்தபோது எடுத்த வீடியோ...
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு நேற்று திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
படப்பிடிப்புக்காக பல்கேரியா நாட்டுக்கு சென்றிருந்த நடிகர் அஜீத், நேரடி விமானம் கிடைக்காததால் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும், பல்கேரியாவில் இருந்து அஜீத் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பல்கேரியாவில் இருந்து இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் அஜீத், தனது மனைவி ஷாலினி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் மவுனமாக நின்று அஞ்சலி செலுத்திய அவர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான ‘சோ’ ராமசாமி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை காலமான செய்தியை அறிந்த அஜீத் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சோவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே, படப்பிடிப்புக்கு இடையில் பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு வந்த அஜீத், இன்றுமாலை மீண்டும் பல்கேரியா புறப்பட்டுச் சென்று படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொள்கிறார்.
அஞ்சலி செலுத்துவதற்காக அஜித் வந்தபோது எடுத்த வீடியோ...
Next Story






