என் மலர்
செய்திகள்

இலவச பொருட்களை தரமாட்டோம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியுமா?: அன்புமணி ராமதாஸ் சவால்
இலவச பொருட்களை தரமாட்டோம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியுமா? என்று பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கடலூர்:
கடலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைக்கண்ணனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவரும், முதல்-அமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையைத்தான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் காப்பியடித்துள்ளன. ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. காப்பியடித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குத்தான். அ.தி.மு.க., தி.மு.க.வால் மதுவையும், ஊழலையும் ஒழிக்க முடியாது. ஊழல் அவர்களின் ரத்தத்தில் ஊறி போய் இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி பா.ம.க.வின் காலம். உழைக்கும் மக்களின் காலம்.
இலவச பொருட்களை தரமாட்டோம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியுமா? ஆனால் நாங்கள் இலவச பொருட்களை தரமாட்டோம். அதற்கு பதிலாக இலவச கல்வி, சுகாதாரத்தை கொடுப்போம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் மிச்சப்படுத்தி தரப்போகிறேன். எனவே ஓட்டுக்கு யாராவது பணம் கொடுத்தால் அதை நீங்கள் வாங்கக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரப்போகிறேன். உலக நாடுகளுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள முன்னேற்றத்தை இங்கே கொண்டு வர வேண்டும் என்ற ஆதங்கம் என்னிடம் உள்ளது. வேளாண்மையில் சிறந்து விளங்கும் இஸ்ரேல் நாட்டில் உள்ள வேளாண்மை தொழில்நுட்பத்தையும் உங்களுக்கு கொண்டு வருவேன்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள்தான் உள்ளன. எனவே நீங்கள் அனைவரும் வீடு, வீடாக சென்று வாக்குகளை சேகரித்து கடலூர் தொகுதியில் போட்டியிடும் பழ.தாமரைக்கண்ணனை வெற்றிபெற செய்ய வேண்டும். அவர் வெற்றிபெற்றால்தான் இந்த அன்புமணி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைக்கண்ணனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவரும், முதல்-அமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையைத்தான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் காப்பியடித்துள்ளன. ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. காப்பியடித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குத்தான். அ.தி.மு.க., தி.மு.க.வால் மதுவையும், ஊழலையும் ஒழிக்க முடியாது. ஊழல் அவர்களின் ரத்தத்தில் ஊறி போய் இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி பா.ம.க.வின் காலம். உழைக்கும் மக்களின் காலம்.
இலவச பொருட்களை தரமாட்டோம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியுமா? ஆனால் நாங்கள் இலவச பொருட்களை தரமாட்டோம். அதற்கு பதிலாக இலவச கல்வி, சுகாதாரத்தை கொடுப்போம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் மிச்சப்படுத்தி தரப்போகிறேன். எனவே ஓட்டுக்கு யாராவது பணம் கொடுத்தால் அதை நீங்கள் வாங்கக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரப்போகிறேன். உலக நாடுகளுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள முன்னேற்றத்தை இங்கே கொண்டு வர வேண்டும் என்ற ஆதங்கம் என்னிடம் உள்ளது. வேளாண்மையில் சிறந்து விளங்கும் இஸ்ரேல் நாட்டில் உள்ள வேளாண்மை தொழில்நுட்பத்தையும் உங்களுக்கு கொண்டு வருவேன்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள்தான் உள்ளன. எனவே நீங்கள் அனைவரும் வீடு, வீடாக சென்று வாக்குகளை சேகரித்து கடலூர் தொகுதியில் போட்டியிடும் பழ.தாமரைக்கண்ணனை வெற்றிபெற செய்ய வேண்டும். அவர் வெற்றிபெற்றால்தான் இந்த அன்புமணி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






