search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை
    X

    தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை

    எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
    சென்னை:

    மிகவும் எதிர்பார்ப்புடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்த தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி, இன்று வெளியான தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடைந்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்று என கூறிய அந்த கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெற முடியவில்லை.

    தேர்தல் தோல்வி தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும்.

    “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×