search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 20 தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
    X

    சென்னையில் 20 தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு

    பா.ம.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் வேட்பாளர்கள் வினோத், தி.இரா. சகாதேவன் ஆகியோரை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது சென்னையில் பா.ம.க. 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று உரையாற்றினார்
    சென்னை :

    பா.ம.க. வேட்பாளர்கள் வினோத் (தி.நகர்) தி.இரா. சகாதேவன் (சைதாப்பேட்டை) ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–

    சென்னை வெள்ளத்தில் பா.ம.க. ஆற்றிய பணிகளை மக்கள் பாராட்டுகிறார்கள். நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும்? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அன்புமணி திட்டம் தீட்டி உள்ளார்.

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணா கற்றுக் கொடுத்ததை இரு திராவிட கட்சிகளும் கைவிட்டு விட்டன. கண்ணியமான அரசியல், முன்னேற்றத்துக்கான அரசியல் பற்றி அன்புமணி பேசுகிறார். இப்படி ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தாரா? என்று மக்கள் பாராட்டும் அளவுக்கு அன்புமணி பேசி வருகிறார்.

    மதுவை கொடுத்து மக்களை சீரழித்துவிட்டது திராவிட கட்சிகள். எங்கும் ஊழல் மலிந்துவிட்டது. புரையோடிப்போன இந்த புண்ணை குணமாக்க மருத்துவர் அன்புமணியால் தான் முடியும்.

    இரு திராவிட கட்சிகளையும் மக்கள் ஒதுக்கி விட்டார்கள். இளைஞர்கள் எங்களை தனியாக நிற்க வற்புறுத்தினார்கள். இப்போது பெருகி வரும் ஆதரவை பார்க்கிறேன். 200 தொகுதிகளுக்கு மேல் பா.ம.க. கைப்பற்றி ஆட்சியை பிடிக்கப்போவது உறுதி.

    சென்னையில் உள்ள 22 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றுவோம். ‘மாம்பழம்’ சின்னத்துக்கு வாக்களித்து மாற்றத்தை தாருங்கள். முன்னேற்றத்தை நாங்கள் தருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வேட்பாளர்கள் சுப்பிரமணி (வில்லிவாக்கம்), அகிலேஷ் (அண்ணாநகர்), குமார் (விருகம்பாக்கம்), வினோபா (வேளச்சேரி) மற்றும் ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், கன்னியப்பன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×