search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன்: விஜயகாந்த் பேச்சு
    X

    தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன்: விஜயகாந்த் பேச்சு

    தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் பேச்சு
    விழுப்புரம் :

    உளுந்தூர்பேட்டை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அங்கிருந்து ஊர்வலமாக வந்து உளுந்தூர்பேட்டை பஸ்நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:–

    இந்த தொகுதி மக்களின் கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். பல முறை இந்த தொகுதியில் நிற்குமாறு கேட்டீர்கள். ஒவ்வொரு முறையும் என்னை பல தொகுதிகளிலும் போட்டியிடுமாறு மக்கள் கேட்டு வருகின்றனர்.

    தற்போது நான் இங்கு போட்டியிடுகிறேன். இந்த தொகுதி மக்களுக்காக நான் பாடுபடுவேன். இங்குள்ள மக்கள் கல்லூரி கட்டித்தரவேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

    எனவே கல்லூரி கட்டி தருவேன், உளுந்தூர்பேட்டை மைய பகுதியில் உள்ளது. அதிகமாக விபத்துகள் நடக்கிறது. எனவே இங்கு உலக தரம் வாய்ந்த மருத்துவமனையை கட்டித்தருவேன். உங்கள் குறைகளை தீர்க்க பாடுபடுவேன். திரும்ப திரும்ப கருணாநிதி, ஜெயலலிதாவை குறை கூற என்ன இருக்கிறது.

    முடியட்டும் விடியட்டும், முடியட்டும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சி, விடியட்டும் தமிழ்நாடு. தமிழகம் முழுவதும்நான் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே தொண்டர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் எனது வெற்றிக்காக பாடுபட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றிபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×