என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு
Byமாலை மலர்21 April 2016 6:21 AM GMT (Updated: 21 April 2016 6:21 AM GMT)
சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி:
வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு அ.தி.மு.க.வில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி, சட்டமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்கிறது.
நெய்வேலியில் தான் போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்தார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து கட்சியின் செயற்குழு முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நெய்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்த சின்னத்தில் போட்டியிட்டு கட்சியின் அங்கீகாரத்தை பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க. தங்களை கடைசி நிமிடத்தில் வெளியேற்றியது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், என்ன நடந்தது என்ற உண்மையை தேர்தலுக்கு பிறகு சொல்வதாக வேல்முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.
வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு அ.தி.மு.க.வில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி, சட்டமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்கிறது.
நெய்வேலியில் தான் போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்தார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து கட்சியின் செயற்குழு முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நெய்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்த சின்னத்தில் போட்டியிட்டு கட்சியின் அங்கீகாரத்தை பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க. தங்களை கடைசி நிமிடத்தில் வெளியேற்றியது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், என்ன நடந்தது என்ற உண்மையை தேர்தலுக்கு பிறகு சொல்வதாக வேல்முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X