என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை பா.ம.க வேட்பாளர் மாற்றம்: விஜயகாந்திற்கு போட்டி வேட்பாளராக வழக்கறிஞர் பாலு அறிவிப்பு
Byமாலை மலர்19 April 2016 5:39 AM GMT (Updated: 19 April 2016 5:39 AM GMT)
சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் ஒருபுறம் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு புறம் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. நேற்று தேமுதிக தரப்பில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பா.ம.க. தரப்பில் ஏற்கனவே உளுந்தூர்பேட்டையில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்திற்கு போட்டியாக பா.ம.க. தரப்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு ராமமூர்த்தி என்பவர் ஏற்கனவே உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு சமூக நீதிப்பேரவையின் மாநில தலைவராகவும் உள்ளார். விஜயகாந்திற்கு போட்டியாக உளுந்தூர்பேட்டையில் பா.ம.க வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் ஒருபுறம் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு புறம் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. நேற்று தேமுதிக தரப்பில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பா.ம.க. தரப்பில் ஏற்கனவே உளுந்தூர்பேட்டையில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்திற்கு போட்டியாக பா.ம.க. தரப்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு ராமமூர்த்தி என்பவர் ஏற்கனவே உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு சமூக நீதிப்பேரவையின் மாநில தலைவராகவும் உள்ளார். விஜயகாந்திற்கு போட்டியாக உளுந்தூர்பேட்டையில் பா.ம.க வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X