என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் இன்று பிரசாரம்
    X

    விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் இன்று பிரசாரம்

    விஜயகாந்த் தனது முதல் பிரசாரத்தை கும்மிடிப்பூண்டியில் தொடங்குகிறார்.
    கும்மிடிப்பூண்டி:

    தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இணைந்தார்.

    6 கட்சிகளின் மெகா கூட்டணியாக அது உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார மாநாடு மாமண்டூரில் நடந்தது.

    இதில் விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தனர். 6 தலைவர்களும் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க.– மக்கள் நலக்கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    கடந்த 2005ம் ஆண்டு தே.மு.தி.க. கட்சி தொடங்கப்பட்டபோது முதல் பிரசார கூட்டத்தை கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் தொடங்கினார். எனவே கும்மிடிப்பூண்டி தொகுதி ராசியான இடமாக விஜயகாந்த் கருதுகிறார்.

    இதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலில் தனது முதல் பிரசாரத்தை விஜயகாந்த் தனது ராசியான இடமான கும்மிடிப்பூண்டியில் இருந்து பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறார். கும்மிடிப்பூண்டி பஸ்நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பொன்னேரி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க.–மக்கள் நலக் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    மாலை 6 மணிக்கு வட சென்னை பகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் பேசுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    Next Story
    ×