என் மலர்
செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் போட்டியிட ஆர்வம் காட்டும் மக்கள் நலக்கூட்டணி
கடலூர் மாவட்டத்தில் மக்கள் நல கூட்டணி அதிக செல்வாக்குடன் திகழ்வதால் இங்கு போட்டியிட குறி வைத்து கட்சி நிர்வாகிகள் காயை நகர்த்தி வருகின்றனர்.
கடலூர்:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16–ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு கட்சியும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.
தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க.– மக்கள் நல கூட்டணி, பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் மோதுகின்றன. தேர்தலில 5 முனை போட்டி நிலவுகிறது.
மக்கள் நல கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சமீபத்தில் த.மா.க.வும் மக்கள் நல கூட்டணியில் இணைந்தது. மேலும் இந்த கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக முன்னேறற்ற கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகியவையும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 கட்சிகளும் இணைந்தால் தே.மு.தி.க.– மக்கள் நல கூட்டணி மெகா கூட்டணியாக மாறிவிடும் சூழ்நிலை உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை கட்சிகள் அதிக செல்வாக்குடன் திகழ்கின்றன. மேலும் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, த.மா.கா. ஆகிய கட்சிகளும் பரவலாக செல்வாக்குடன் திகழ்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகள் உள்ளன. இங்குள்ள விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வெற்றி பெற்றது.
எனவே, வருகிற சட்டசபை தேர்தலிலும் இந்த 3 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட தே.மு.தி.க. அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
விடுதலை சிறுத்தை கட்சியினர் தனித்தொகுதியான காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முனைப்புடன் உள்ளனர். மேலும் பொது தொகுதியான பண்ருட்டி தொகுதியிலும் அவர்கள் போட்டியிட விரும்புகின்றனர்.
மதி.மு.க.வினர் கடலூர், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்கள்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
தற்போது சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தீவிரம் காட்டி வருகிறது.
மக்கள் நல கூட்டணியில் தற்போது இணைந்து உள்ள த.மா.கா.வினர் கடலூர், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது. எனவே, த.மா.கா.வினர் 2–க்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அதிக செல்வாக்குடன் உள்ளனர். அந்த கட்சியினர் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் மக்கள் நல கூட்டணி அதிக செல்வாக்குடன் திகழ்வதால் இங்கு போட்டியிட குறி வைத்து கட்சி நிர்வாகிகள் காயை நகர்த்தி வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16–ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு கட்சியும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.
தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க.– மக்கள் நல கூட்டணி, பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் மோதுகின்றன. தேர்தலில 5 முனை போட்டி நிலவுகிறது.
மக்கள் நல கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சமீபத்தில் த.மா.க.வும் மக்கள் நல கூட்டணியில் இணைந்தது. மேலும் இந்த கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக முன்னேறற்ற கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகியவையும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 கட்சிகளும் இணைந்தால் தே.மு.தி.க.– மக்கள் நல கூட்டணி மெகா கூட்டணியாக மாறிவிடும் சூழ்நிலை உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை கட்சிகள் அதிக செல்வாக்குடன் திகழ்கின்றன. மேலும் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, த.மா.கா. ஆகிய கட்சிகளும் பரவலாக செல்வாக்குடன் திகழ்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகள் உள்ளன. இங்குள்ள விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வெற்றி பெற்றது.
எனவே, வருகிற சட்டசபை தேர்தலிலும் இந்த 3 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட தே.மு.தி.க. அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
விடுதலை சிறுத்தை கட்சியினர் தனித்தொகுதியான காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முனைப்புடன் உள்ளனர். மேலும் பொது தொகுதியான பண்ருட்டி தொகுதியிலும் அவர்கள் போட்டியிட விரும்புகின்றனர்.
மதி.மு.க.வினர் கடலூர், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்கள்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
தற்போது சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தீவிரம் காட்டி வருகிறது.
மக்கள் நல கூட்டணியில் தற்போது இணைந்து உள்ள த.மா.கா.வினர் கடலூர், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது. எனவே, த.மா.கா.வினர் 2–க்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அதிக செல்வாக்குடன் உள்ளனர். அந்த கட்சியினர் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் மக்கள் நல கூட்டணி அதிக செல்வாக்குடன் திகழ்வதால் இங்கு போட்டியிட குறி வைத்து கட்சி நிர்வாகிகள் காயை நகர்த்தி வருகின்றனர்.
Next Story






