search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா பேரவை நிர்வாகிகள் நியமனம் - ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு தேனி மாவட்ட செயலாளர் பதவி
    X

    அம்மா பேரவை நிர்வாகிகள் நியமனம் - ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு தேனி மாவட்ட செயலாளர் பதவி

    தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பி.ரவிச்சந்திரகுமாரை நியமித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புரட்சி தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளை அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பி.ரவிச்சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார்.

    வேலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக புலவர் ரமேசும், திருச்சி புறநகர் மாவட்டத்துக்கு கிருஷ்ணணும், பெரம்பலூர் மாவட்டத்துக்கு உதயம் எஸ்.ரமேசும், மதுரை மாநகர் மாவட்டத்துக்கு எஸ்.எஸ். சரவணனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமி மகன் கே.ஏ.கே. முகிலனுக்கு அம்மா பேரவை தென்சென்னை வடக்கு மாவட்ட இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    அவர் ஏற்கனவே வகித்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இதேபோல் அம்மா பேரவையின் தென் சென்னை தெற்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்புக்கு ஜெயவர்த்தன் எம்.பி. நியமிக்கப்பட்டு உள்ளார்.

    Next Story
    ×