என் மலர்
செய்திகள்

வருகிற 24-ந்தேதிக்குள் போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறவேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஜெ. தீபா பேரவை செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ப.இளவழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதிக்குள் போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேற வேண்டும். போயஸ் கார்டனை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு விடவேண்டும். தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க அனுமதிக்க மாட்டோம்.
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கிய சசிகலா குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சருக்கே இந்த கதியென்றால் சசிகலா கையில் ஆட்சியை கொடுத்தால் தமிழக மக்களின் கதி என்னாவது?
தமிழக மக்களை காப்பாற்ற ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டர்களை காப்பாற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பிப்ரவரி 24-ந் தேதி நல்ல முடிவெடுப்பார். பொறுத்திருந்து பாருங்கள், ஒற்றுமையுடன் செயல்படுவோம். வெற்றி நமதே என பேசினார்.






