search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவராக சந்திரசேகர் நியமனம்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
    X

    தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவராக சந்திரசேகர் நியமனம்: திருநாவுக்கரசர் அறிவிப்பு

    தமிழ்நாடு காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு தனித் தனியாக பிரிக்கப்பட்டு கலைப்பிரிவு தலைவராக கே. சந்திரசேகரனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் நியமித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு தனித் தனியாக பிரிக்கப்பட்டு கலைப்பிரிவு தலைவராக கே. சந்திரசேகரனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் நியமித்துள்ளார்.

    இவர் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவராக நீண்ட காலம் செயல்பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழை பரப்புகிற வகையில் பல்வேறு பணிகளை மேற் கொண்டு வருகிறார். தமிழக அரசு மணிமண்டபம் கட்டுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். தேசிய உணர்வு மிக்க கலைத்துறையினரோடு தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×