என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலவச வேட்டி-சேலைகள் தயாரிப்பு பணிமுடியும் நிலையில் உள்ளது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
Byமாலை மலர்28 Dec 2016 4:50 AM GMT (Updated: 28 Dec 2016 4:50 AM GMT)
பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு வழங்க இலவச வேட்டி-சேலைகள் தயாரிப்பு பணிமுடியும் நிலையில் உள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
தமிழக கைத்தறிதுறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஈரோடு வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி- சேலை தயாரிப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக கைத்தறி முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் துணிநூல் இயக்குனர் முனியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் ஏழை- எளியவர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 112 விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வேட்டி-சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இப்பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. பொங்கலுக்கு பயனாளிகளுக்கு வழங்க ஏதுவாக கொள்முதல் முகமை நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்தியாவிலேயே கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியிலும் தமிழகம் “நம்பர் ஒன்”னாக திகழ்கிறது.
மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவர்களால் ஆண்டு தோறும் விலையில்லா வேட்டி- சேலை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
தமிழக கைத்தறிதுறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஈரோடு வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி- சேலை தயாரிப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக கைத்தறி முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் துணிநூல் இயக்குனர் முனியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் ஏழை- எளியவர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 112 விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வேட்டி-சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இப்பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. பொங்கலுக்கு பயனாளிகளுக்கு வழங்க ஏதுவாக கொள்முதல் முகமை நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்தியாவிலேயே கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியிலும் தமிழகம் “நம்பர் ஒன்”னாக திகழ்கிறது.
மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவர்களால் ஆண்டு தோறும் விலையில்லா வேட்டி- சேலை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X